×

மருத்துவ சிகிச்சை முடிந்து இல்லத்துக்கு திரும்பினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

சென்னை : தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் உடல் நலக்குறைவுக் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருப்பவர் மா.சுப்பிரமணியன். அவர், இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு சென்னை, சைதாப்பேட்டையில் தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் அவரை உடனடியாக கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சர்க்கரையின் அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அமைச்சர் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்துக் கண்காணித்து வந்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு (Coronary angiogram) இருதய இரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அமைச்சர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு, இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்.

The post மருத்துவ சிகிச்சை முடிந்து இல்லத்துக்கு திரும்பினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Mae ,Supramanyan ,Chennai ,Tamil Nadu ,Minister of Peoples and Welfare Minister ,Ma. Subramanyan ,House Minister ,Ma ,Supramanian ,Dinakaran ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...